Monday, September 16, 2013

நமது இந்துதர்மத்தில் அம்மா, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், வாழ்க்கைத் துணைக்குச் செய்ய வேண்டிய கடமைகள், தமது மகன்/ளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. இதில் இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள் மிக மிக முக்கியமானவை!

Purattasi Amavasya


உதாரணமாக நமது அம்மாவின் அம்மாவாகிய பாட்டி வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சிவனடி சேர்ந்திருந்தால், ஒவ்வொரு வருடமும் அதே வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்; இதைப் போன்றே அம்மாவின் அப்பாவான தாத்தா, அப்பாவின் பெற்றோர்களான தாத்தா, அப்பத்தா என்று அவரவர் சிவனடி சேர்ந்த திதியை சரியாகக் கண்டறிந்து தர்ப்பணம் செய்யவேண்டும்; இன்றைய வேகமான வாழ்க்கையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் இதற்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் அமாவாசை அன்னதானம்!!

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசை நாளில்  அன்னதானம் செய்வதன் மூலமாக இறையடி சேர்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்கள் கிட்டும்; அதுவும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவசை, தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளில் மட்டுமாவது அன்னதானம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் ஆசியைப் பெற முடியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்களே பல தலைமுறைகளாக நிம்மதியோடும், செல்வச் செழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுவும் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யும் அன்னதானம்,தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.

முதல் மூன்று யுகங்களான கிருதயுகம், திரோதாயுகம், துவாபரயுகம்- இம்மூன்றிலும் நாம் செய்யும் யாகங்கள், பூஜைகள், தானங்கள் நமது கர்மவினைகளை முழுமையாக நசித்துவிட்டு, அளவற்ற புண்ணியத்தையும், சகல சம்பத்துகளையும் தரும். ஆனால், நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இறை நாம ஜபமும், சரியான திதியில் செய்யப்படும் அன்னதானமும் மட்டுமே நமது கர்மவினைகளில் இருந்து காக்கும்; ஏனெனில், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யப்படும் இறைசெயல்கள் மட்டுமே கலியுகத்தில் நமக்கு பலன் தரும். நமது கர்மவினைகளிலிருந்து விடுபட நாம் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

தினமும் ஒருமணி நேரம் வரை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதுதல் அல்லது ஜபித்தல்; புரட்டாசி அமாவாசையன்று  அன்னதானம் செய்தல் போன்றவை மட்டுமே நமது கர்மவினைகளை கரைத்து நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்;

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள் புரட்டாசி அமாவாசை அன்னதானத்தை தமது சொந்தப் பொறுப்பில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த வருடம் முதல் நமது ஆன்மீகக்கடலின் வேண்டுகோளுக்கு இணங்க நம்மையும் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கிறார்.

புரட்டாசி மாதத்து அமாவாசையானது இந்த வருடம் 4.10.2013 வெள்ளிக்கிழமை காலை 7.04க்குத் துவங்கி, 5.10.2013 சனிக்கிழமை காலை 6.52 வரை நிறைவடைகிறது. இந்த அமாவாசையன்று நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் அன்னதானமானது கடந்த 12 ஆண்டுகளாக (2001 முதல் இந்த வருடம் வரை) நம்மால் செய்யமுடியாமல் விடுபட்ட முன்னோர்களுக்கான தர்ப்பண கடனை நீக்கிவிடும். (பலருக்கு தீரவே தீராத கடன்கள், நீண்ட  கால நோய்கள், தொழிலில் எவ்வளவு திறமையாக செயல்பட்டும் சாதிக்கமுடியாமல் தவிப்பது, வரவுக்கும் செலவுக்கும் நடுவே குடும்பம் நடத்த முடியாமல் போராடிக் கொண்டிருப்பது; குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையின்மை, குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்வது - இவைகளுக்குக் காரணம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருப்பதே. சிலர் ஏனோதானோ என்று அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்திருப்பர்; அதுவும் காரணமாக அமைந்திருக்கும். நாம் செய்தாலே அளவற்ற புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை நமது ஆன்மீக குருவின் தலைமையில் செய்தால்...யோசித்து பாருங்கள்.

இந்த புரட்டாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு பெற விரும்புவோர் 1.10.2013 செவ்வாய்க்கிழமைக்குள் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து தமது பங்காக அரிசி, பலசரக்குகளை வாங்கித் தரவேண்டும்; பணமாகத் தர அனுமதியில்லை; அன்னதானத்துக்குரிய பொருட்களை நீங்களே வாங்கித் தரவேண்டும்; எவ்வளவு என்பது முக்கியமில்லை; நீங்கள் மனப்பூர்வமாக நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் இந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம் என்ற மனப்பான்மையே முக்கியம்.

எங்கே? எப்போது நமது ஐயாவை சந்திப்பது? எவ்வளவு வாங்கித் தருவது? எப்படி வாங்கித் தருவது? போன்ற சந்தேகங்களை நீங்கள் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி அவர்களிடம் 9092116990 என்ற எண்ணில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களில் கேட்கலாம்;

மேலும் நீங்கள் எந்த நாளன்று ஐயாவை நேரில் சந்தித்து இந்த அன்னதானத்திற்கு தானம் வழங்குகிறீர்களோ, அதற்கு மறுநாளில் இருந்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் மாஞ்சுள்ளி ஐந்தும், வேப்பஞ்சுள்ளி ஐந்தும், அரசமரத்து சுள்ளி ஐந்தும் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும். (சுள்ளி என்பது மரங்களில் இருந்து உதிரும் குச்சிகள்) குறைந்தது 9 நாட்களும், அதிகபட்சமாக 21 நாட்களும் வைத்திருந்து,4.10.2013 அன்று அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக இவைகளைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு வரும்போது (முடிந்தால்) உங்கள் குடும்பத்தாருடன் வருகை தர வேண்டும். இந்த சுள்ளிகளைக் கொண்டு முன்னோர்களுக்கான கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு, அதன் முடிவில் உங்கள் அனைவரது சார்பாக அன்னதானம் செய்யப்படும்.

அன்னதானம் நடைபெறும் இடம்:

அருள்நிறை கழுகாச்சலமூர்த்தி திருக்கோவில் வளாகம்,
கழுகுமலை பேரூராட்சி, சங்கரன்கோவில் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

பேருந்து வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியில் இறங்க வேண்டும்; அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;

ரயில் வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் கோவில்பட்டியில் நிற்கும்.கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் கழுகுமலையில் நிற்கும்.

குறிப்பு: முதல் நாளே வந்து தங்க விரும்புவோர் கோவில்பட்டியில் தங்குவது நன்று.

நடைபெறும் நாள்: 4.10.2013 வெள்ளிக்கிழமை

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Tagged: ,

0 comments:

Post a Comment