Sunday, March 9, 2014

உண்மையான திருநீறு

உண்மையான திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


திருநீறு வகைகள். திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1.கல்பம் = கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம் - ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம் - மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம். -அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்

Sunday, February 16, 2014

பொதிகைப் பயணம் 2014 - பகுதி 2

இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் காரணமாக செல்ல முடியவில்லை. தமிழக பாதை வழியாக செல்லவும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வனத்துறை அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஆகவே வழக்கம் போல் கேரள பாதை தான் என முடிவு செய்து தினமும் folow செய்து ஒரு வழியாக(பல போராட்டங்களுக்கு நடுவில்) ஜனவரி 28 அன்று அனுமதி கிடைத்தது.

சென்னையிலிருந்து அடியேன், CTS ராஜன் கணேஷ் மற்றும் CTS ஜெய் நம்பி ராஜா ஆகிய மூவரும் கிளம்புவதாக எங்கள் திட்டம். கடைசி நேரத்தில் ராஜன் கணேஷ் அவரால் வர முடியாத சூழலால் அடியேனும் ஜெய் நம்பி ராஜா வும் கிளம்பினோம். சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று சில ஸ்தலங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து பாநாசம் சென்று மற்ற அடியார்களுடன் சேர்ந்து அங்கிருந்து பொதிகை செல்வது தான் எங்கள் திட்டம்.

ஒருநாள் முன்னதாக நம்பி நெல்லை சென்றுவிட்டார். அடியேன் 26.1.14 ஞாயிறு அன்று நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பினேன். மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லை போய் சேர்ந்தேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸில் பாபநாசம் சென்றடைந்தோம்.

முதலில் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் தரிசனம்.




















Tuesday, January 14, 2014

பொதிகைப் பயணம் 2014


Pothigai Tour
பொதிகைப் பயணம்  2014
நமது குரு ஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் வரும் ஜனவரி 28ம் தேதி பொதிகை செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அடியேன் மற்றும் சில நண்பர்கள் குழுவுடன் (சுமார் 15 பேர்) செல்ல இருக்கிறோம்.

இந்த வருடம் கேரளா வனத்துறையின் கெடுபிடியால் சற்று தாமதமாகியுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு வசதியாக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முகவரி http://www.forest.kerala.gov.in/. இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

அடியார்களுக்கு ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 9944309615. 9444979615

S. சேர்மராஜ்

Wednesday, October 30, 2013

“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” – ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.

சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.

அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.

எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)


இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.

சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

Monday, September 16, 2013

வாருங்கள் புரட்டாசி அமாவசை அன்று (4-10-13) அன்னதானம் செய்வோம்

நமது இந்துதர்மத்தில் அம்மா, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், வாழ்க்கைத் துணைக்குச் செய்ய வேண்டிய கடமைகள், தமது மகன்/ளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. இதில் இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள் மிக மிக முக்கியமானவை!

Purattasi Amavasya


உதாரணமாக நமது அம்மாவின் அம்மாவாகிய பாட்டி வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சிவனடி சேர்ந்திருந்தால், ஒவ்வொரு வருடமும் அதே வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்; இதைப் போன்றே அம்மாவின் அப்பாவான தாத்தா, அப்பாவின் பெற்றோர்களான தாத்தா, அப்பத்தா என்று அவரவர் சிவனடி சேர்ந்த திதியை சரியாகக் கண்டறிந்து தர்ப்பணம் செய்யவேண்டும்; இன்றைய வேகமான வாழ்க்கையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் இதற்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் அமாவாசை அன்னதானம்!!

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசை நாளில்  அன்னதானம் செய்வதன் மூலமாக இறையடி சேர்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்கள் கிட்டும்; அதுவும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவசை, தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளில் மட்டுமாவது அன்னதானம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் ஆசியைப் பெற முடியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்களே பல தலைமுறைகளாக நிம்மதியோடும், செல்வச் செழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுவும் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யும் அன்னதானம்,தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.

முதல் மூன்று யுகங்களான கிருதயுகம், திரோதாயுகம், துவாபரயுகம்- இம்மூன்றிலும் நாம் செய்யும் யாகங்கள், பூஜைகள், தானங்கள் நமது கர்மவினைகளை முழுமையாக நசித்துவிட்டு, அளவற்ற புண்ணியத்தையும், சகல சம்பத்துகளையும் தரும். ஆனால், நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இறை நாம ஜபமும், சரியான திதியில் செய்யப்படும் அன்னதானமும் மட்டுமே நமது கர்மவினைகளில் இருந்து காக்கும்; ஏனெனில், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யப்படும் இறைசெயல்கள் மட்டுமே கலியுகத்தில் நமக்கு பலன் தரும். நமது கர்மவினைகளிலிருந்து விடுபட நாம் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

தினமும் ஒருமணி நேரம் வரை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதுதல் அல்லது ஜபித்தல்; புரட்டாசி அமாவாசையன்று  அன்னதானம் செய்தல் போன்றவை மட்டுமே நமது கர்மவினைகளை கரைத்து நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்;

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள் புரட்டாசி அமாவாசை அன்னதானத்தை தமது சொந்தப் பொறுப்பில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த வருடம் முதல் நமது ஆன்மீகக்கடலின் வேண்டுகோளுக்கு இணங்க நம்மையும் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கிறார்.

புரட்டாசி மாதத்து அமாவாசையானது இந்த வருடம் 4.10.2013 வெள்ளிக்கிழமை காலை 7.04க்குத் துவங்கி, 5.10.2013 சனிக்கிழமை காலை 6.52 வரை நிறைவடைகிறது. இந்த அமாவாசையன்று நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் அன்னதானமானது கடந்த 12 ஆண்டுகளாக (2001 முதல் இந்த வருடம் வரை) நம்மால் செய்யமுடியாமல் விடுபட்ட முன்னோர்களுக்கான தர்ப்பண கடனை நீக்கிவிடும். (பலருக்கு தீரவே தீராத கடன்கள், நீண்ட  கால நோய்கள், தொழிலில் எவ்வளவு திறமையாக செயல்பட்டும் சாதிக்கமுடியாமல் தவிப்பது, வரவுக்கும் செலவுக்கும் நடுவே குடும்பம் நடத்த முடியாமல் போராடிக் கொண்டிருப்பது; குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையின்மை, குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்வது - இவைகளுக்குக் காரணம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருப்பதே. சிலர் ஏனோதானோ என்று அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்திருப்பர்; அதுவும் காரணமாக அமைந்திருக்கும். நாம் செய்தாலே அளவற்ற புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை நமது ஆன்மீக குருவின் தலைமையில் செய்தால்...யோசித்து பாருங்கள்.

இந்த புரட்டாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு பெற விரும்புவோர் 1.10.2013 செவ்வாய்க்கிழமைக்குள் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து தமது பங்காக அரிசி, பலசரக்குகளை வாங்கித் தரவேண்டும்; பணமாகத் தர அனுமதியில்லை; அன்னதானத்துக்குரிய பொருட்களை நீங்களே வாங்கித் தரவேண்டும்; எவ்வளவு என்பது முக்கியமில்லை; நீங்கள் மனப்பூர்வமாக நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் இந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம் என்ற மனப்பான்மையே முக்கியம்.

எங்கே? எப்போது நமது ஐயாவை சந்திப்பது? எவ்வளவு வாங்கித் தருவது? எப்படி வாங்கித் தருவது? போன்ற சந்தேகங்களை நீங்கள் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி அவர்களிடம் 9092116990 என்ற எண்ணில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களில் கேட்கலாம்;

மேலும் நீங்கள் எந்த நாளன்று ஐயாவை நேரில் சந்தித்து இந்த அன்னதானத்திற்கு தானம் வழங்குகிறீர்களோ, அதற்கு மறுநாளில் இருந்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் மாஞ்சுள்ளி ஐந்தும், வேப்பஞ்சுள்ளி ஐந்தும், அரசமரத்து சுள்ளி ஐந்தும் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும். (சுள்ளி என்பது மரங்களில் இருந்து உதிரும் குச்சிகள்) குறைந்தது 9 நாட்களும், அதிகபட்சமாக 21 நாட்களும் வைத்திருந்து,4.10.2013 அன்று அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக இவைகளைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு வரும்போது (முடிந்தால்) உங்கள் குடும்பத்தாருடன் வருகை தர வேண்டும். இந்த சுள்ளிகளைக் கொண்டு முன்னோர்களுக்கான கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு, அதன் முடிவில் உங்கள் அனைவரது சார்பாக அன்னதானம் செய்யப்படும்.

அன்னதானம் நடைபெறும் இடம்:

அருள்நிறை கழுகாச்சலமூர்த்தி திருக்கோவில் வளாகம்,
கழுகுமலை பேரூராட்சி, சங்கரன்கோவில் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

பேருந்து வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியில் இறங்க வேண்டும்; அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;

ரயில் வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் கோவில்பட்டியில் நிற்கும்.கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் கழுகுமலையில் நிற்கும்.

குறிப்பு: முதல் நாளே வந்து தங்க விரும்புவோர் கோவில்பட்டியில் தங்குவது நன்று.

நடைபெறும் நாள்: 4.10.2013 வெள்ளிக்கிழமை

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Tuesday, August 6, 2013

ஆடி அமாவாசையும், கால பைரவப்பெருமானும்

வானம் 12 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு, 12 ராசிகளாக பெயரிடப்பட்டுள்ளன. அவையே ஆன்மீகமயமாக்கப்பட்டு, ஜோதிடமாக உருவெடுத்தது. இந்த 12 ராசிகளில் ஞானத்தை வழங்கும் ராசிகள் கடகராசியும், மகர ராசியும் ஆகும். கடகராசியில் ராகு அல்லது கேதுவும், மகரராசியில் கேது அல்லது ராகுவும் இருக்க பிறந்திருந்தால் அவர்கள் இறைவனது அளவற்ற அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.

சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி
சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி

அதே போல, ஆடிமாதத்தில் அமாவாசை வரும் நாளன்று கடகராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேருவார்கள்; தை மாதத்தில் வரும் அமாவாசையன்றும் சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவார்கள். இந்த இரண்டு அமாவாசை நாட்களிலும் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியச் செயலும் பல கோடி மடங்காகப் பெருகி நமது வாழ்க்கையில் கர்மவினைகளை அழிக்கும்; அளவற்ற புண்ணியத்தையும், செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் அள்ளித் தரும்.
  • விஜய வருடத்தின் ஆடி அமாவாசை நாளான இன்று 6.8.2013 செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும்,அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையானது பூச நட்சத்திரத்தில் தான் வரும்.
  • இறைவழிபாட்டுக்குரிய செவ்வாய்க்கிழமையன்று ஆடி அமாவாசை வருவது அரிதிலும் அரிதாகும்.
  • இந்த நன்னாளில் நாம் அன்னதானம் செய்யலாம்; ஆடை தானம் செய்யலாம்; (முடிந்தால்) சொர்ணதானம் செய்யலாம்; தண்ணீர் தானம் செய்யலாம்; கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடலாம்; பிறருக்கு முக்கியமான உதவி செய்யலாம்; மந்திரங்கள் ஜபிக்கலாம்;
நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி காலத்தை இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு உண்டு. ஏனெனில், நம்மை இயக்கும் நவக்கிரகங்கள், அந்த நவக்கிரகங்களைக்  கட்டுப்படுத்தும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள், அந்த பஞ்ச பூதங்கள் மூலமாக நவக்கிரகங்களையும், நவக்கிரகங்கள் மூலமாக மனிதர்களாகிய நம்மையும் வழிநடத்தும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் (மும்மூர்த்திகள்) = இவர்கள் அனைவரையும் நிர்வகிப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் மட்டுமே!
  • இந்த நன்னாள் முழுவதும் நாம் ஒவ்வொருவரும் (அசைவம் சாப்பிடாமல் இருந்து) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்; அவசரம்; முக்கியம்!!!
  • இதைச் செய்யமுடியாதவர்கள், இன்று ஏதாவது ஒரு மணிநேரம் (குரு ஓரை வரும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை; அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
  • இந்த மந்திரத்தை இன்று ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் சென்று ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்; மூலவராகிய சிவபெருமான் முன்பாகவோ, ஸ்ரீகால பைரவப் பெருமான் முன்பாகவோ ஜபிக்கலாம்; முடிந்தால் கோவிலில் மஞ்சள் துண்டு விரித்து, இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை (ஐந்து முகம்) வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்;
  • இதையும் செய்ய முடியாதவர்கள், அருகில் இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
  • அல்லது நமது வீட்டிலேயே இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிப்பது நன்று;
தினசரி ஸ்ரீகால பைரவ மந்திரம் எழுதுபவர்கள் இன்று குறைந்தது மூன்று மணி நேரம் ( காலை 12 மணி முதல் 1 மணி வரை; மாலை 4.30 முதல் 6 மணி வரை; இரவு 7 மணி முதல் 8 மணி வரை) பின்வருமாறு எழுதலாம்;
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ
ஓம் கணபதி நமஹ
1.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
2.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
என்று 108 முறை எழுத வேண்டும். இந்த  நாளில் மட்டும் மூன்று ஒரு மணி நேரமும், பிற நாட்களில் ஏதாவது ஒரு 108 முறை வீதம் ஒரு வருடம் வரையிலும் தினமும் எழுத வேண்டும். இன்று மூன்று ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை தடவை 108 முறை எழுத முடியுமோ அத்தனை தடவை எழுதலாம்.

இவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்; அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை!

இந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.

செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

நன்றி : வீரமுனி ஐயா, ஆன்மிகக்கடல்.

Monday, July 1, 2013

சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர்

சுக்கிர பகவானுக்குரிய பரிகார ஸ்தலம் ஸ்ரீரங்கம் என்றெண்ணி... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சென்று... காசு பறிக்கும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வந்து மூச்சு விட்டபோது தான் மண்டையில் உரைத்தது ஆன்மிகக்கடல் வீரமுனி ஐயாவிடம் கேக்காமல் போனோமே என்று.

உடனே போன் செய்து விவரத்தை சொன்னால் மண்டையில் உரைக்கும்படியாக சொன்னார்....சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர் என்று.

இனி  ஐயாவினுடைய எழுத்துக்கள்.

திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்
திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்

சுக்கிர தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் ஸ்தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில். (அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் இந்த திருக்கோவிலூர்)

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வாகன வசதிகள்,புத்தம் புது ஆடை ஆபரணங்கள்,சுகமான திருமண வாழ்க்கை, சரசக்கலை  போன்றவை எந்தக் குறைவின்றியும் அமையும். ஆனால், கலியுகமான நாம் வாழும் காலத்தில் அப்படி எல்லோருக்கும் அமைந்திருக்கிறதா?

ஜோதிட விதிகளின் படி ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சமாகக் கூடாது;நீசமாகக்கூடாது;மறையக் கூடாது;சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் போன்ற கிரகங்களோடு சேரக்கூடாது.அசுர குருவாகிய சுக்கிரன், தேவகுருவாகிய வியாழன் என்ற குருவுடனும் சேராமல் இருக்க வேண்டும்.இன்னும் சில ஜோதிடவிதிகளும் உண்டு.

சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமாகிறார்;அதே சுக்கிரன் கன்னி ராசியில் அஸ்தத்தில் நீசமாகிறார்.லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுகக் குறைவு இருக்கவே செய்யும்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் இருப்பவர்கள் படித்தபடிப்புக்கு ஏற்றாற்போல  நாகரீகமாக ஆடை அணியமாட்டார்.காதல் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு இருக்க மாட்டார்.ரொமான்ஸ் கலையில் இவர் எப்போதும் கத்துக்குட்டிதான்.இவரை காதலிக்க விரும்பும் எதிர்பாலினத்தின் ‘சிக்னல்’களை இவரால் புரிந்துகொள்ளவே முடியாது.(ஆனால்,தனது வாழ்க்கைத் துணையை தமது அன்புக்குப் பாத்திரமாக வைத்திருக்க வேண்டுமே?)

ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களுக்கான பலன்களும் அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பார்;இதைப் புரிந்து கொண்டு ஏராளமான புண்ணியக் காரியங்களைச் செய்வோரும் உண்டு.அப்படிச் செய்வதன் மூலமாக அவரது குழந்தைகள் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்கள்.அதே சமயம்,ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களையும் இந்த ஜன்மத்திலேயே அனுபவிப்பார்.(பாவக்கிரகங்கள் சேராமலும்,பார்க்காமலும் இருந்தால் முழுமையாக அனுபவிக்கும் யோகங்கள் ஏற்படும்)

நூறு பேர்களின் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் சராசரியாக   ஒன்பது பேர்களுக்கு மட்டுமே சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறது.சுக்கிரன் உடன் பாவக்கிரகங்கள் சேர்வதாலும்,அப்படிச் சேர்ந்து அவைகளின் திசாபுக்தி வருவதாலுமே நாட்டில் காமம் சார்ந்த வக்கிர சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களிலும் பாதிபேர்களுக்கு வேறுவிதமான தோஷங்கள் இருந்து,சுக்கிரனை செயலிழந்து போக வைக்கின்றன.அந்த தோஷங்களை நீக்கியப்பின்னரே,சுகமான வாழ்க்கை அமைகின்றது.நாத்திகம்,கம்யூனிஸம், பத்திரிகைப் பிரச்சாரங்களால் இந்து தர்மம் பற்றிய பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன;அல்லது அழிக்கப்பட்டுவிட்டன;எனவே, இவைகளை நம்புவோர் எண்ணிக்கை  நமது தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

சுக்கிரனது பலத்தை தேவையான அளவுக்கு அதிகரிக்க பல விதமான கோவில்கள் இருக்கின்றன.பல ஜோதிட வார இதழ்களிலும்,புத்தகங்களிலும் இது தொடர்பாக விளக்கங்களும்,புராணரீதியாக காரணங்களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அந்தக் கோவில்களின் சக்தியை விடவும்,முழுமையான சக்தி அட்டவீரட்ட ஸ்தலமாகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நிரம்பியிருக்கிறது.ஏனெனில்,சுக்கிரபகவான் புனர் ஜன்மம் எடுத்தது இந்த திருக்கோவிலூரில்தான்! தாம் மறுவாழ்வு பெற்ற இந்த கோவிலில் தம்மை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான சுக்கிரதோஷங்களையும் நீக்கி,சுகம் நிறைந்த வாழ்க்கையை அளித்துவருகிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்கள்,வாடகை கார்கள்/வேன்கள் வைத்து தொழில் செய்பவர்கள்,உணவகம் நடத்துபவர்கள்,இனிப்புப் பதார்த்தங்கள் தயாரிப்போர், இனிப்புக்கடைகள் வைத்திருப்போர்,பெண்கள் கல்வியகங்கள் வைத்திருப்போர்,கரும்புத்  தோட்டங்கள் வைத்திருப்போர்,சர்க்கரை ஆலை நடத்துவோர்,ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் விளைவிப்போர்,ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்துபவர்கள்,அழகு நிலையம் நடத்துபவர்கள்,அழகுக்கலைப் பயிற்சி மையங்கள் நடத்துபவர்களுக்காக பின்வரும் வழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை மட்டும் பின்பற்றுவதன் மூலமாக மேற்கூறிய தொழில் அல்லது அது தொடர்பான தொழில்களில் அனைத்து தடைகளும் நீங்கி,மகத்தான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பது சர்வநிச்சயம்.இந்த ஆறு வெள்ளிக்கிழமைகளில் கடைசி அல்லது முதல் வெள்ளிக்கிழமை மட்டும் விழுப்புரம் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பின்வரும் பொருட்களால் அங்கே இருக்கும் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்படி அபிஷேகம் செய்தபின்னர்,அந்த அபிஷேகத் தண்ணீர்க் கலவையை நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.அதில்,நாம் குளிக்க வேண்டும். ஆறு வெள்ளிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.

அதே சமயம்,கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கே வழிபாடு செய்யும்போது, மூலவராகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கும் அபிஷேகம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.(வசதியுள்ளவர்கள் அதே நாளில் இங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கும் தனியாக ஒரு அபிஷேகம் செய்யலாம்.இந்த கால பைரவரையும்,இந்த வீரட்டேஸ்வரரையும் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி ராஜராஜசோழ மன்னன் தொடர்ந்து வழிபட்டார்; அப்படி வழிபட்டதால்,சோழ சம்ராஜ்ஜியம் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது;எவ்வ்வ்வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாகத் தெரியுமா? வடக்கே சைபீரியாதான் எல்லை; தெற்கே அண்டார்டிக்கா எல்லை;மேற்கே ஆப்ரிக்கக்கண்டமும்,கிழக்கே நியூஸிலாந்தும் எல்லையாக மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்தது;இன்றும்,ஆஸ்திரேலியாவின் மேற்கு வனப்பகுதியில் தமிழ்ப்பேசும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்காக நமது தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப் பட்டவர்கள்!!!)

மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை மற்றும் போதுமான மல்லிகை உதிரிப்பூக்கள், விபூதி, மாப்பொடி,பால்,பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் சுக்கிர பகவானுக்கு நாம் வாங்கி வந்த மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலையையும்,வெள்ளைப்பட்டுத் துண்டினையும் சார்த்த வேண்டும்.யாருக்கு சுக்கிர தோஷம் நீங்க வேண்டுமோ,அவர்கள் பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி, மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.இதன் மூலமாக சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் தீரும்.

சுக்கிரன் கன்னிராசியில் இருக்கப்பிறந்து,சுக்கிர திசை நடப்பில் இருப்பவர்களும்,சுக்கிர திசை இனிமேல் வர இருப்பவர்களும் இதே வழிபாட்டுமுறையை ஆறு பவுர்ணமி நாட்களுக்கு பின்பற்றிட சுக்கிரனது நீசத்தன்மை முழுமையாக நீங்கிவிடும்.

ஓம்சிவசிவஓம்

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...