Saturday, January 9, 2016

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE**

குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது. வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிருந்து கிளம்புகிறோம். இந்த முறை சென்னையிலிருந்து இரண்டே பேர் தான். மதுரையிலிருந்து கிளம்பும் மூன்று  நண்பர்கள் விதுராவில் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள். வேறு யாரவது இந்த தேதியில் கிளம்புவதாக இருந்தால் தெரிவிக்கவும். சேர்ந்து போகலாம்.


****************************************************************************************************


நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



கேரள வனத்துறையின் தகவல்படி, வரும் 11ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. http://serviceonline.gov.in/serviceLinkHome.html?serviceToken=kjSTCZISXJ&OWASP_CSRFTOKEN=7STR-P1XK-AT3Y-RML5-N547-OS8X-LLHW-TNEX#! என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

சென்ற வருடம் காலை 8 மணிக்கு ஆரம்பித்த முன்பதிவு வெறும் அரை மணிநேரத்திலேயே முடிந்துவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் பதிவு செய்ய முடியவில்லை.  இந்த வருடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பார்ப்போம். 

மேலும் இந்த வருடம் என்று டிக்கெட் கிடைக்கிறதோ அன்று செல்லலாம் என்ற முடிவுடன் இருக்கிறோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி எண்ணுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.

Monday, May 4, 2015

ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

திரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின்  உத்தரவு கிடைத்துள்ளது. 

இதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை! 

இந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும். 

இதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்

இது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள்  கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com 

இதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தில் ஸ்கிப்பினூடாக  பதினைந்து நிமிட நேர்முக உரையாடல்  நடைபெறும். 

இதன்போது கற்கை நிபந்தனைகளுக்கு உறுதி அளித்தால். குருநாதர் அனுமதியின் பின்னர்  முதலாவது பாடமும் வினாத்தாளும் மின்னஞ்சல் உடாக அனுப்பப்படும்.  இதற்கு வாரம் ஒரு நாள் குறித்த நேரம் ஒதுக்கி படித்து விளங்கி கொண்டு பின்னர் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையினை டைப் செய்து திருத்தத்திற்கு எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

உங்களது விடைகள் திருப்தியாக இருந்தால் உங்களுக்கு அடுத்த பாடம் அனுப்பி வைக்கப்படும். 

இந்த முறையில்  மொத்தம் எண்பது பாடங்கள் மூலம் நீங்கள் காயத்ரி உபாசனையின் அடிப்படைகளை விளங்கி கொள்வீர்கள். 

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் எவற்றை எல்லாம் கற்று கொள்வீர்கள் என்பதற்கான பாடத்திட்டம் கீழ்வருமாறு; 

பகுதி ஒன்று: காயத்ரி உபாசனை மாணவர் 

குருபரம்பரை வரலாறு, குரு வணக்க முறை, குரு சாதனை 

ஐயமும் தெளிவும், காயத்ரியும் பிராணனும், காயத்ரி சாதனைக்குரிய ஏற்பாடுகள், காயத்ரி பிராண ஆகர்ஷண சாதனை ,காயத்ரி மந்திர அடிப்படை சாதனை,  பாவனை மூலம் தெய்வ சக்தியை சூக்ஷ்ம உடலில் ஏற்கும் பயிற்சி, காயத்ரி பிராண வளர்ச்சி சாதனை, காயத்ரி அடிப்படை பிரணாயாமம், காயத்ரி கும்பக பிரணாயாம சாதனை, காயத்ரியும் முக்குண வளர்ச்சியும், மந்திர இரகசியம்,  காயத்ரியும் பிரபஞ்ச சூக்ஷ்ம சக்திகளும், காயத்ரியும் உடலின் சூக்ஷ்ம கிரந்திகளும்,  எமது துன்பங்களுக்கான காரணம்,  பிரபஞ்ச ஞானத்தை பெறுவதற்கான இரகசிய வழி,  காயத்ரியும் உடல் மனச்சுத்தியும், காயத்ரியும் பாவ விமோசனமும், காயத்ரி உபாசனையின் நியமங்கள், காயத்ரி உபாசனையின் முக்கிய அங்கங்கள், 

பகுதி ஒன்றினை ஒழுங்காக கற்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் முறையான காயத்ரி உபாசனை பத்ததி கற்பிக்கப்பட்டு உபாசனைக்குரிய வழிமுறைகள் கற்பிக்கப்படும். இந்த உபாசனையினை தினசரியோ, வாரம் ஒருமுறையோ செய்தவண்ணம் பகுதி இரண்டு கற்கையினை ஆரம்பிக்க வேண்டும், 

பகுதி இரண்டு: காயத்ரி உபாசகர் 
பகுதி இரண்டில் கீழ்வரும் விடயதானங்கள் கற்பிக்கப்படும்.  

உபாசனையின் அங்கங்களான பிராண பிரதிஷ்டை, தீக்ஷை, ரிஷி, அங்க, ஷடங்க  நியாச முறைகளும் அவற்றின் விஞ்ஞான விளக்கங்களும், ஆசமனம், உபாசனையில் தெய்வ சக்தியை ஈர்க்கும் பிரணாயாம முறைகள், ஆவாகனாதி தூப, தீப உபசார முறைகளும் அவற்றிற்கான விளக்கங்கள். அர்ச்சனை, மந்திர ஜபம், மானச ஜெப முறைகள், க்ஷமாபானம், 

பகுதி இரண்டு கற்றல் முடியும்போது நீங்கள் பிரபஞ்ச ஞான சக்தியை உபாசிக்கும் காயத்ரி உபாசகர் என்ற நிலையினை பெறுவீர்கள். இந்த கற்கை மூலம் தெய்வ உபாசனை என்பது வெறுமனே ஒரு கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை இல்லை என்பதயும் எமது முயற்சியாலும் இதற்கு முன்னர் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சூக்ஷ்ம நிலையில் உள்ள  குருமண்டலத்தின் உதவியாலும் பெறப்படும் ஒரு பேறு என்பதனை நன்கு விளங்கி கொள்வீர்கள்.  
மூன்றாவது காயத்ரி உபாசனை தத்துவ விளக்கம் 

இந்த பகுதியில் காயத்ரி ஸ்ம்ருதி, காயத்ரி உபநிஷதம், காயத்ரி இராமாயணம், காயத்ரியிற்கான மகரிஷிகளது பாஷ்யம் என்பன விளங்கப்படுத்த படும். இதன் மூலம் காயத்ரி பற்றி மகரிஷிகள் என்ன இரகசியங்களை கூறியிருக்கிறார்கள் என்பதனை விளங்கி கொள்ள முடியும். 


நான்காவது யாக விஞ்ஞானம் 

காயத்ரியும் யஞமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஆகவே காயத்ரி சாதகன் கட்டாயம் அக்னியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்திருக்க வேண்டும். இந்த பகுதியில் யாக விஞ்ஞானம், யக்ஞ சிகிச்சை,  யாக தத்துவம், சாஸ்திரங்கள் கூறும் வேள்வியின் மகிமை, யாக சாதநியினால பெறக்கூடிய நன்மைகள், வேள்வியும் பாபநாசமும், வேள்வியும் விஞ்ஞானமும், யாகமும் குணமாற்றமும், ரோக நிவாரண ஹோமத்திரவியங்கள், சப்த பரிணாமங்கள், யாக பூமி நிர்ணயம், சுபதின நிர்ணயம், ஜபமாலா இலக்கணம், யாக விதானம், தினசரி காயத்ரி ஹோமம், இல்லற வேள்வி. 

ஐந்தாவது காயத்ரி லகு அனுஷ்டான சாதனை 

மேலே கூறிய நான்கு நிலைகளிலும் காயத்ரி பற்றிய உண்மைகளை கற்ற உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மூலம் குறைந்த காலத்தில்  உங்கள் உடல், மன, பிராண சக்திகளை அதிகரித்து எப்படி சக்தி பெறுவது எனும் வழியினை சொல்லித்தரும். இந்த அனுஷ்டானத்தின் மூலம் நீங்கள் 

இப்படி காயத்ரி லகு அனுஷ்டானம் செய்பவர்கள் படிப்படியாக குருமண்டலத்தின் ஈர்ப்பினை பெற்று மிக உயர்ந்த சாதனைகளுக்கு தயாராவார்கள். 

இவற்றை எல்லாம் வாசித்து விட்டு பிரமித்து நாம் குடும்பஸ்தர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், நேரம் இல்லை என உங்களுக்கு நீங்களே தடைகளை  ஏற்படுத்தி கொண்டு விலகி விடாமல் இப்படியான விடயத்தினை பார்த்து வாசிக்க கிடைத்ததே ரிஷிகளின் அழைப்பு உங்களுக்கு உள்ளது என்ற நேர்மறை மனோபாவத்துடன் (Positive attitude) கற்கையில் இணையுங்கள். 

கற்கைக்கான குரு தட்சணை

மின்னஞ்சல், இணையம் மூலம் கற்பதற்கு எதுவித கட்டணமும் இல்லை. பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப படும் அவற்றை அச்சிட்டு உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்வதனை நீங்களே செய்து கொள்ளவேண்டும். 

எமது நேரத்தை எமது குருநாதரின் பணியாக வாழ்கையின் தர்மத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக  தருகிறோம். அதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இவற்றை சிரத்தையுடன் கற்று அதன்மூலம் பெறும் சக்தியையும், ஞானத்தையும் உங்களது வாழ்க்கை அனுபவத்திற்கு கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியும், இன்பமும் உள்ளதாக்கி இனிய குடும்பத்தை, சமூகத்தை உருவாக்கினால் அதே மிகப்பரிய குருதட்சணை!

மேலும் எதிர்காலத்தில் தெய்வ, யோக சாதனை தொடர்பாக நூற்களாக ஏதும் வெளியிடுவதாக, அல்லது கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக ஏற்பாடுகள் இருந்தால் நீங்களாக முன்வந்து அவற்றின் செலவுகளை பகிர்ந்து செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  

நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் 
  • ஒருபாடத்தை படித்து தகுந்த வினாக்களுக்கு விடையினை நீங்கள் அனுப்பி வைக்காமல் எக்காரணம் கொண்டும் அடுத்த பாடம் அனுப்ப படமாட்டாது. 
  • உங்கள் தொடர்பாடல் மரியாதையான முறையிலும், குரு சிஷ்ய பாவத்திலும் இருக்க வேண்டும். 
  • ஒவ்வொரு சாதனைகள் பயிற்சிகள் தரப்படும் போதும் அவற்றை உங்களது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய முடியுமா என்பதனை நிதானமாக துணிந்து கொண்டு செய்ய தொடங்க வேண்டும். 
  • இவ்வாறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செய்ய முடியாமல் போகும்போது எம்மால் முடியாது என்று கைவிட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி முயற்சிக்கும்போது குருவருளாலும் இறையருளாலும் நீங்கள் நம்பவே முடியாத பல நன்மைகள் பெறுவீர்கள். 
இந்த  கற்கையில் உங்கள் சிரத்தையும் முயற்சியும்தான்  மூலதனமே அன்றி வேறு எதுவும் இல்லை. தாகம் உள்ளவர்கள் பெற்று பயனடைவதகாகவே இந்த ஏற்பாடு.

அன்புடன் 
திரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Friday, January 2, 2015

பொதிகைப் பயணம் 2015

நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Pothigai 2015

கேரள வனத்துறையின் தகவல்படி வரும் ஜனவரி 8ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை பொதிகை செல்லலாம். அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. http://www.forest.kerala.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

இந்த வருடம் ஜனவரி 15ம் தேதி அன்று செல்லலாம் என்று குருவருளால் முடிவு செய்துள்ளோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி என்னுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.

பொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 7448812399.

Monday, December 15, 2014

ஷீரடி சுற்றுலா - பிப்ரவரி 2015

அன்பர்களுக்கு,

வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று குருவருளின் துணையால் ஷீரடிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோம். 3.2.2015 செவ்வாய் இரவு கிளம்பி 8.2.2015 ஞாயிறு அன்று வருவதாக திட்டம்.

ஷீரடி, சனிசிக்னாபூர் (சனி பகவான் கோவில்), ரேணுகாதேவி கோவில், மகா கணபதி கோவில் போன்ற கோவில்களுக்கு செல்லப் போகிறோம்.

இருவழி ரயில் கட்டணம், தங்குமிடம், பஸ், வேன் போன்ற கட்டணங்கள் உட்பட ரூ.3400 மட்டுமே. (உணவு தவிர்த்து)

கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம். எண்: 9840465277, 9444979615.







Friday, December 12, 2014

பிறந்த நேரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பொதுவாக 90 சதவீத ஜோதிடர்களிடம் ஒரு மனப்பாங்கு உண்டு. என்னவென்றால் ஜோதிடம் பார்க்க வருபவர் எந்த  ஜாதகத்தை நீட்டினாலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள். ஜாதகத்தின் 12 கட்டங்களையும் ரவுண்டு கட்டி அடித்தால் தான் இவருக்கும் நிம்மதி; பார்க்க வருபவருக்கும் சந்தோசம்.
  • முதலில் கொண்டு வந்த ஜாதகம் சரியானது தானா?
  • பிறந்த நேரம் சரியாக உள்ளதா அல்லது சரி பார்க்க வேண்டுமா? 
  • ஜாதகர்/ஜாதகி தற்போது உயிரோடு உள்ளாரா? 
  • அவரின் ஆயுள் எப்படி உள்ளது?
என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வாய்க்கு வந்தபடி அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள்.

ஏன் இவற்றை சரி பார்க்க வேண்டும்? ஜாதகத்தை உள்ளவாறு பார்த்தால் என்ன? இவற்றிற்கு நேரம் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

பிறந்த நேரத்தை முதலில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே.

முதலில் பிறந்த நேரம் என்பது என்ன? அதை எவ்வாறு கணிப்பது என்பது குறித்து பலவித குழப்பங்கள் இன்று உள்ளன.  தொப்புள் கொடி அறுத்த நேரமா, குழந்தை அழுத நேரமா, தலை வெளியில் தெரியும் நேரமா? முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும். பொதுவாக ஜனன காலம் என்பது சிரசோதயகாலம் என்று பழைய ஜாதகக் குறிப்புகளில் இருக்கும்.  அதாவது குழந்தையின் (சிரசு) தலை உதயமான காலம்.  இப்போது தொப்புள் கொடி அறுப்பது தான் குழந்தையை தனிமைப்படுத்தி தனி உயிராக்குகிறது என்கிறார்கள்.

ஆனால், ஒரு சிசுவானது எப்பொழுது சுயமாக சுவாசிக்க ஆரம்பித்து, தனது கர்ம வினைகளின்படி வாழக்கையை ஆரம்பிக்கிறதோ, அந்த வினாடியே சிசுவின் உண்மையான பிறந்த நேரம் என்று முடிவு செய்யலாம்.

அது சரி, பிறந்த நேரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

நமது கருத்து என்னவெனில், பிறந்த நேரம் சரியாக இருந்தால்தான் ஒருவரது குழந்தை பருவம் தொடங்கி முதுமை காலம் வரை அவருக்கு நடக்கும் நன்மை, தீமை பலன்களை சரியாக கணிக்க முடியும். இறைநிலை அருளிய 36 பாக்கியங்களில் எவற்றையெல்லாம் அனுபவிக்கும் அமைப்பு உள்ளது. எவை மூலமாக இன்னல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை, அடிப்படை கல்வி, உடல் நிலை, தந்தை-தாயின் அரவணைப்பு, செய்யும் தொழில், பார்க்கும் உத்தியோகம், திருமண பாக்கியம், இல்லற வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பம், குழந்தைப் பேறு, ஆயுள் காலம் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சரி, பிறந்த நேரம் தவறாக இருந்தால் பலன்கள் மாறுமா?

உறுதியாக. ஒரு ஜாதகர் தன் கர்ம வினைப்படி எவற்றை அனுபவித்து ஆகவேண்டுமோ அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஆனால் பிறந்த நேரம் தவறாக குறிக்கப்பட்ட ஒரு ஜாதகர், தனது எதிர்காலத்தை கணிக்க வேண்டி ஜோதிடரிடம் வரும்போது, ஜோதிடர் கணிக்கும் அத்தனையும் தவறாக போகும். இங்குதான் அனைத்து ஜோதிடர்களும் கேலிக்கு உள்ளாகின்றனர்.

என்றுமே ஜோதிடம் தவறாகாது; ஜோதிடர்தான் தவறு செய்வார்.

ஒரு ஜாதகரின் பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிடத்தில் சிறப்பான முறைகள் பல உண்டு. இதற்கு தேவை
  • ஜாதகரின் பிறந்த தேதி
  • ஜாதகரின் பிறந்த நேரம்
  • ஜாதகரின் பிறந்த இடம் 
ஆகியன மட்டுமே. மேற்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை கணித்துவிட முடியும். ஜாதகரின் ஜாதக பலாபலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும்.

நமது ஸ்ரீ ஜோதிடத்திலும் அவ்வாறு பிறந்த நேரம் சரிபார்த்தபின்னரே பலன்கள் சொல்ல துவங்குகிறோம்.

அன்பர்களது கருத்துகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

தொடர்புக்கு : 98404 65277, 9444 97 9615
 

Sunday, March 9, 2014

உண்மையான திருநீறு

உண்மையான திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.


திருநீறு வகைகள். திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1.கல்பம் = கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம் - ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம் - மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம். -அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்

Sunday, February 16, 2014

பொதிகைப் பயணம் 2014 - பகுதி 2

இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் காரணமாக செல்ல முடியவில்லை. தமிழக பாதை வழியாக செல்லவும் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வனத்துறை அதிகாரிகள் கருணை காட்டவில்லை. ஆகவே வழக்கம் போல் கேரள பாதை தான் என முடிவு செய்து தினமும் folow செய்து ஒரு வழியாக(பல போராட்டங்களுக்கு நடுவில்) ஜனவரி 28 அன்று அனுமதி கிடைத்தது.

சென்னையிலிருந்து அடியேன், CTS ராஜன் கணேஷ் மற்றும் CTS ஜெய் நம்பி ராஜா ஆகிய மூவரும் கிளம்புவதாக எங்கள் திட்டம். கடைசி நேரத்தில் ராஜன் கணேஷ் அவரால் வர முடியாத சூழலால் அடியேனும் ஜெய் நம்பி ராஜா வும் கிளம்பினோம். சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்று சில ஸ்தலங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து பாநாசம் சென்று மற்ற அடியார்களுடன் சேர்ந்து அங்கிருந்து பொதிகை செல்வது தான் எங்கள் திட்டம்.

ஒருநாள் முன்னதாக நம்பி நெல்லை சென்றுவிட்டார். அடியேன் 26.1.14 ஞாயிறு அன்று நெல்லை எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பினேன். மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லை போய் சேர்ந்தேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு பஸ்ஸில் பாபநாசம் சென்றடைந்தோம்.

முதலில் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் தரிசனம்.




















Tuesday, January 14, 2014

பொதிகைப் பயணம் 2014


Pothigai Tour
பொதிகைப் பயணம்  2014
நமது குரு ஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் வரும் ஜனவரி 28ம் தேதி பொதிகை செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அடியேன் மற்றும் சில நண்பர்கள் குழுவுடன் (சுமார் 15 பேர்) செல்ல இருக்கிறோம்.

இந்த வருடம் கேரளா வனத்துறையின் கெடுபிடியால் சற்று தாமதமாகியுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு வசதியாக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முகவரி http://www.forest.kerala.gov.in/. இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.

அடியார்களுக்கு ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 9944309615. 9444979615

S. சேர்மராஜ்

Wednesday, October 30, 2013

“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” – ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.

சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.

அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.

எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)


இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.

சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

Monday, September 16, 2013

வாருங்கள் புரட்டாசி அமாவசை அன்று (4-10-13) அன்னதானம் செய்வோம்

நமது இந்துதர்மத்தில் அம்மா, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், வாழ்க்கைத் துணைக்குச் செய்ய வேண்டிய கடமைகள், தமது மகன்/ளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. இதில் இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகள் மிக மிக முக்கியமானவை!

Purattasi Amavasya


உதாரணமாக நமது அம்மாவின் அம்மாவாகிய பாட்டி வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சிவனடி சேர்ந்திருந்தால், ஒவ்வொரு வருடமும் அதே வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்; இதைப் போன்றே அம்மாவின் அப்பாவான தாத்தா, அப்பாவின் பெற்றோர்களான தாத்தா, அப்பத்தா என்று அவரவர் சிவனடி சேர்ந்த திதியை சரியாகக் கண்டறிந்து தர்ப்பணம் செய்யவேண்டும்; இன்றைய வேகமான வாழ்க்கையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் இதற்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் அமாவாசை அன்னதானம்!!

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசை நாளில்  அன்னதானம் செய்வதன் மூலமாக இறையடி சேர்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலன்கள் கிட்டும்; அதுவும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவசை, தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளில் மட்டுமாவது அன்னதானம் செய்வதன் மூலமாக முன்னோர்களின் ஆசியைப் பெற முடியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்களே பல தலைமுறைகளாக நிம்மதியோடும், செல்வச் செழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுவும் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யும் அன்னதானம்,தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் தமது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.

முதல் மூன்று யுகங்களான கிருதயுகம், திரோதாயுகம், துவாபரயுகம்- இம்மூன்றிலும் நாம் செய்யும் யாகங்கள், பூஜைகள், தானங்கள் நமது கர்மவினைகளை முழுமையாக நசித்துவிட்டு, அளவற்ற புண்ணியத்தையும், சகல சம்பத்துகளையும் தரும். ஆனால், நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இறை நாம ஜபமும், சரியான திதியில் செய்யப்படும் அன்னதானமும் மட்டுமே நமது கர்மவினைகளில் இருந்து காக்கும்; ஏனெனில், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யப்படும் இறைசெயல்கள் மட்டுமே கலியுகத்தில் நமக்கு பலன் தரும். நமது கர்மவினைகளிலிருந்து விடுபட நாம் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

தினமும் ஒருமணி நேரம் வரை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதுதல் அல்லது ஜபித்தல்; புரட்டாசி அமாவாசையன்று  அன்னதானம் செய்தல் போன்றவை மட்டுமே நமது கர்மவினைகளை கரைத்து நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்;

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள் புரட்டாசி அமாவாசை அன்னதானத்தை தமது சொந்தப் பொறுப்பில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த வருடம் முதல் நமது ஆன்மீகக்கடலின் வேண்டுகோளுக்கு இணங்க நம்மையும் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கிறார்.

புரட்டாசி மாதத்து அமாவாசையானது இந்த வருடம் 4.10.2013 வெள்ளிக்கிழமை காலை 7.04க்குத் துவங்கி, 5.10.2013 சனிக்கிழமை காலை 6.52 வரை நிறைவடைகிறது. இந்த அமாவாசையன்று நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் அன்னதானமானது கடந்த 12 ஆண்டுகளாக (2001 முதல் இந்த வருடம் வரை) நம்மால் செய்யமுடியாமல் விடுபட்ட முன்னோர்களுக்கான தர்ப்பண கடனை நீக்கிவிடும். (பலருக்கு தீரவே தீராத கடன்கள், நீண்ட  கால நோய்கள், தொழிலில் எவ்வளவு திறமையாக செயல்பட்டும் சாதிக்கமுடியாமல் தவிப்பது, வரவுக்கும் செலவுக்கும் நடுவே குடும்பம் நடத்த முடியாமல் போராடிக் கொண்டிருப்பது; குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையின்மை, குழந்தைகள் பெற்றோரை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக வாழ்வது - இவைகளுக்குக் காரணம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருப்பதே. சிலர் ஏனோதானோ என்று அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்திருப்பர்; அதுவும் காரணமாக அமைந்திருக்கும். நாம் செய்தாலே அளவற்ற புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை நமது ஆன்மீக குருவின் தலைமையில் செய்தால்...யோசித்து பாருங்கள்.

இந்த புரட்டாசி அமாவாசை அன்னதானத்தில் பங்கு பெற விரும்புவோர் 1.10.2013 செவ்வாய்க்கிழமைக்குள் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து தமது பங்காக அரிசி, பலசரக்குகளை வாங்கித் தரவேண்டும்; பணமாகத் தர அனுமதியில்லை; அன்னதானத்துக்குரிய பொருட்களை நீங்களே வாங்கித் தரவேண்டும்; எவ்வளவு என்பது முக்கியமில்லை; நீங்கள் மனப்பூர்வமாக நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் இந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம் என்ற மனப்பான்மையே முக்கியம்.

எங்கே? எப்போது நமது ஐயாவை சந்திப்பது? எவ்வளவு வாங்கித் தருவது? எப்படி வாங்கித் தருவது? போன்ற சந்தேகங்களை நீங்கள் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி அவர்களிடம் 9092116990 என்ற எண்ணில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களில் கேட்கலாம்;

மேலும் நீங்கள் எந்த நாளன்று ஐயாவை நேரில் சந்தித்து இந்த அன்னதானத்திற்கு தானம் வழங்குகிறீர்களோ, அதற்கு மறுநாளில் இருந்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் மாஞ்சுள்ளி ஐந்தும், வேப்பஞ்சுள்ளி ஐந்தும், அரசமரத்து சுள்ளி ஐந்தும் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும். (சுள்ளி என்பது மரங்களில் இருந்து உதிரும் குச்சிகள்) குறைந்தது 9 நாட்களும், அதிகபட்சமாக 21 நாட்களும் வைத்திருந்து,4.10.2013 அன்று அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக இவைகளைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு வரும்போது (முடிந்தால்) உங்கள் குடும்பத்தாருடன் வருகை தர வேண்டும். இந்த சுள்ளிகளைக் கொண்டு முன்னோர்களுக்கான கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு, அதன் முடிவில் உங்கள் அனைவரது சார்பாக அன்னதானம் செய்யப்படும்.

அன்னதானம் நடைபெறும் இடம்:

அருள்நிறை கழுகாச்சலமூர்த்தி திருக்கோவில் வளாகம்,
கழுகுமலை பேரூராட்சி, சங்கரன்கோவில் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

பேருந்து வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியில் இறங்க வேண்டும்; அங்கிருந்து கழுகுமலைக்கு வரலாம்;

ரயில் வழித்தடம்:

மதுரை டூ திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் கோவில்பட்டியில் நிற்கும்.கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் கழுகுமலையில் நிற்கும்.

குறிப்பு: முதல் நாளே வந்து தங்க விரும்புவோர் கோவில்பட்டியில் தங்குவது நன்று.

நடைபெறும் நாள்: 4.10.2013 வெள்ளிக்கிழமை

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Tuesday, August 6, 2013

ஆடி அமாவாசையும், கால பைரவப்பெருமானும்

வானம் 12 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு, 12 ராசிகளாக பெயரிடப்பட்டுள்ளன. அவையே ஆன்மீகமயமாக்கப்பட்டு, ஜோதிடமாக உருவெடுத்தது. இந்த 12 ராசிகளில் ஞானத்தை வழங்கும் ராசிகள் கடகராசியும், மகர ராசியும் ஆகும். கடகராசியில் ராகு அல்லது கேதுவும், மகரராசியில் கேது அல்லது ராகுவும் இருக்க பிறந்திருந்தால் அவர்கள் இறைவனது அளவற்ற அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.

சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி
சொர்ண ஆகர்ஷன பைரவர், இலுப்பைக்குடி

அதே போல, ஆடிமாதத்தில் அமாவாசை வரும் நாளன்று கடகராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேருவார்கள்; தை மாதத்தில் வரும் அமாவாசையன்றும் சூரியனும் சந்திரனும் ஒன்றிணைவார்கள். இந்த இரண்டு அமாவாசை நாட்களிலும் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியச் செயலும் பல கோடி மடங்காகப் பெருகி நமது வாழ்க்கையில் கர்மவினைகளை அழிக்கும்; அளவற்ற புண்ணியத்தையும், செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் அள்ளித் தரும்.
  • விஜய வருடத்தின் ஆடி அமாவாசை நாளான இன்று 6.8.2013 செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும்,அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையானது பூச நட்சத்திரத்தில் தான் வரும்.
  • இறைவழிபாட்டுக்குரிய செவ்வாய்க்கிழமையன்று ஆடி அமாவாசை வருவது அரிதிலும் அரிதாகும்.
  • இந்த நன்னாளில் நாம் அன்னதானம் செய்யலாம்; ஆடை தானம் செய்யலாம்; (முடிந்தால்) சொர்ணதானம் செய்யலாம்; தண்ணீர் தானம் செய்யலாம்; கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடலாம்; பிறருக்கு முக்கியமான உதவி செய்யலாம்; மந்திரங்கள் ஜபிக்கலாம்;
நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி காலத்தை இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு உண்டு. ஏனெனில், நம்மை இயக்கும் நவக்கிரகங்கள், அந்த நவக்கிரகங்களைக்  கட்டுப்படுத்தும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள், அந்த பஞ்ச பூதங்கள் மூலமாக நவக்கிரகங்களையும், நவக்கிரகங்கள் மூலமாக மனிதர்களாகிய நம்மையும் வழிநடத்தும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் (மும்மூர்த்திகள்) = இவர்கள் அனைவரையும் நிர்வகிப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் மட்டுமே!
  • இந்த நன்னாள் முழுவதும் நாம் ஒவ்வொருவரும் (அசைவம் சாப்பிடாமல் இருந்து) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்; அவசரம்; முக்கியம்!!!
  • இதைச் செய்யமுடியாதவர்கள், இன்று ஏதாவது ஒரு மணிநேரம் (குரு ஓரை வரும் நேரமான காலை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை; அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை) ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
  • இந்த மந்திரத்தை இன்று ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் சென்று ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்; மூலவராகிய சிவபெருமான் முன்பாகவோ, ஸ்ரீகால பைரவப் பெருமான் முன்பாகவோ ஜபிக்கலாம்; முடிந்தால் கோவிலில் மஞ்சள் துண்டு விரித்து, இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை (ஐந்து முகம்) வைத்துக் கொண்டு ஜபிக்கலாம்;
  • இதையும் செய்ய முடியாதவர்கள், அருகில் இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
  • அல்லது நமது வீட்டிலேயே இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிப்பது நன்று;
தினசரி ஸ்ரீகால பைரவ மந்திரம் எழுதுபவர்கள் இன்று குறைந்தது மூன்று மணி நேரம் ( காலை 12 மணி முதல் 1 மணி வரை; மாலை 4.30 முதல் 6 மணி வரை; இரவு 7 மணி முதல் 8 மணி வரை) பின்வருமாறு எழுதலாம்;
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ
ஓம் கணபதி நமஹ
1.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
2.ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
என்று 108 முறை எழுத வேண்டும். இந்த  நாளில் மட்டும் மூன்று ஒரு மணி நேரமும், பிற நாட்களில் ஏதாவது ஒரு 108 முறை வீதம் ஒரு வருடம் வரையிலும் தினமும் எழுத வேண்டும். இன்று மூன்று ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை தடவை 108 முறை எழுத முடியுமோ அத்தனை தடவை எழுதலாம்.

இவ்வாறு செய்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்; அப்பேர்ப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆடி அமாவாசை!

இந்த நன்னாளில் சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை அல்லது கொல்லிமலை அல்லது காசி அல்லது இமயமலை அல்லது எந்த ஒரு மலைமீதும் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூலவருக்கு முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபிப்பது அவசியம்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடக ராசியினர் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சனிபகவானின் தாக்கம் பெருமளவு குறையும். ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,சதாசிவனின் ஆசியும் கிட்டும்.

செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

நன்றி : வீரமுனி ஐயா, ஆன்மிகக்கடல்.

Monday, July 1, 2013

சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர்

சுக்கிர பகவானுக்குரிய பரிகார ஸ்தலம் ஸ்ரீரங்கம் என்றெண்ணி... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சென்று... காசு பறிக்கும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வந்து மூச்சு விட்டபோது தான் மண்டையில் உரைத்தது ஆன்மிகக்கடல் வீரமுனி ஐயாவிடம் கேக்காமல் போனோமே என்று.

உடனே போன் செய்து விவரத்தை சொன்னால் மண்டையில் உரைக்கும்படியாக சொன்னார்....சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர் என்று.

இனி  ஐயாவினுடைய எழுத்துக்கள்.

திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்
திருக்கோவிலூரில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்

சுக்கிர தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் ஸ்தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில். (அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் இந்த திருக்கோவிலூர்)

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வாகன வசதிகள்,புத்தம் புது ஆடை ஆபரணங்கள்,சுகமான திருமண வாழ்க்கை, சரசக்கலை  போன்றவை எந்தக் குறைவின்றியும் அமையும். ஆனால், கலியுகமான நாம் வாழும் காலத்தில் அப்படி எல்லோருக்கும் அமைந்திருக்கிறதா?

ஜோதிட விதிகளின் படி ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சமாகக் கூடாது;நீசமாகக்கூடாது;மறையக் கூடாது;சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் போன்ற கிரகங்களோடு சேரக்கூடாது.அசுர குருவாகிய சுக்கிரன், தேவகுருவாகிய வியாழன் என்ற குருவுடனும் சேராமல் இருக்க வேண்டும்.இன்னும் சில ஜோதிடவிதிகளும் உண்டு.

சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமாகிறார்;அதே சுக்கிரன் கன்னி ராசியில் அஸ்தத்தில் நீசமாகிறார்.லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுகக் குறைவு இருக்கவே செய்யும்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் இருப்பவர்கள் படித்தபடிப்புக்கு ஏற்றாற்போல  நாகரீகமாக ஆடை அணியமாட்டார்.காதல் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு இருக்க மாட்டார்.ரொமான்ஸ் கலையில் இவர் எப்போதும் கத்துக்குட்டிதான்.இவரை காதலிக்க விரும்பும் எதிர்பாலினத்தின் ‘சிக்னல்’களை இவரால் புரிந்துகொள்ளவே முடியாது.(ஆனால்,தனது வாழ்க்கைத் துணையை தமது அன்புக்குப் பாத்திரமாக வைத்திருக்க வேண்டுமே?)

ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களுக்கான பலன்களும் அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பார்;இதைப் புரிந்து கொண்டு ஏராளமான புண்ணியக் காரியங்களைச் செய்வோரும் உண்டு.அப்படிச் செய்வதன் மூலமாக அவரது குழந்தைகள் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்கள்.அதே சமயம்,ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களையும் இந்த ஜன்மத்திலேயே அனுபவிப்பார்.(பாவக்கிரகங்கள் சேராமலும்,பார்க்காமலும் இருந்தால் முழுமையாக அனுபவிக்கும் யோகங்கள் ஏற்படும்)

நூறு பேர்களின் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் சராசரியாக   ஒன்பது பேர்களுக்கு மட்டுமே சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறது.சுக்கிரன் உடன் பாவக்கிரகங்கள் சேர்வதாலும்,அப்படிச் சேர்ந்து அவைகளின் திசாபுக்தி வருவதாலுமே நாட்டில் காமம் சார்ந்த வக்கிர சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களிலும் பாதிபேர்களுக்கு வேறுவிதமான தோஷங்கள் இருந்து,சுக்கிரனை செயலிழந்து போக வைக்கின்றன.அந்த தோஷங்களை நீக்கியப்பின்னரே,சுகமான வாழ்க்கை அமைகின்றது.நாத்திகம்,கம்யூனிஸம், பத்திரிகைப் பிரச்சாரங்களால் இந்து தர்மம் பற்றிய பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன;அல்லது அழிக்கப்பட்டுவிட்டன;எனவே, இவைகளை நம்புவோர் எண்ணிக்கை  நமது தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

சுக்கிரனது பலத்தை தேவையான அளவுக்கு அதிகரிக்க பல விதமான கோவில்கள் இருக்கின்றன.பல ஜோதிட வார இதழ்களிலும்,புத்தகங்களிலும் இது தொடர்பாக விளக்கங்களும்,புராணரீதியாக காரணங்களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அந்தக் கோவில்களின் சக்தியை விடவும்,முழுமையான சக்தி அட்டவீரட்ட ஸ்தலமாகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நிரம்பியிருக்கிறது.ஏனெனில்,சுக்கிரபகவான் புனர் ஜன்மம் எடுத்தது இந்த திருக்கோவிலூரில்தான்! தாம் மறுவாழ்வு பெற்ற இந்த கோவிலில் தம்மை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான சுக்கிரதோஷங்களையும் நீக்கி,சுகம் நிறைந்த வாழ்க்கையை அளித்துவருகிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்கள்,வாடகை கார்கள்/வேன்கள் வைத்து தொழில் செய்பவர்கள்,உணவகம் நடத்துபவர்கள்,இனிப்புப் பதார்த்தங்கள் தயாரிப்போர், இனிப்புக்கடைகள் வைத்திருப்போர்,பெண்கள் கல்வியகங்கள் வைத்திருப்போர்,கரும்புத்  தோட்டங்கள் வைத்திருப்போர்,சர்க்கரை ஆலை நடத்துவோர்,ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் விளைவிப்போர்,ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்துபவர்கள்,அழகு நிலையம் நடத்துபவர்கள்,அழகுக்கலைப் பயிற்சி மையங்கள் நடத்துபவர்களுக்காக பின்வரும் வழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை மட்டும் பின்பற்றுவதன் மூலமாக மேற்கூறிய தொழில் அல்லது அது தொடர்பான தொழில்களில் அனைத்து தடைகளும் நீங்கி,மகத்தான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பது சர்வநிச்சயம்.இந்த ஆறு வெள்ளிக்கிழமைகளில் கடைசி அல்லது முதல் வெள்ளிக்கிழமை மட்டும் விழுப்புரம் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பின்வரும் பொருட்களால் அங்கே இருக்கும் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்படி அபிஷேகம் செய்தபின்னர்,அந்த அபிஷேகத் தண்ணீர்க் கலவையை நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.அதில்,நாம் குளிக்க வேண்டும். ஆறு வெள்ளிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.

அதே சமயம்,கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கே வழிபாடு செய்யும்போது, மூலவராகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கும் அபிஷேகம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.(வசதியுள்ளவர்கள் அதே நாளில் இங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கும் தனியாக ஒரு அபிஷேகம் செய்யலாம்.இந்த கால பைரவரையும்,இந்த வீரட்டேஸ்வரரையும் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி ராஜராஜசோழ மன்னன் தொடர்ந்து வழிபட்டார்; அப்படி வழிபட்டதால்,சோழ சம்ராஜ்ஜியம் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது;எவ்வ்வ்வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாகத் தெரியுமா? வடக்கே சைபீரியாதான் எல்லை; தெற்கே அண்டார்டிக்கா எல்லை;மேற்கே ஆப்ரிக்கக்கண்டமும்,கிழக்கே நியூஸிலாந்தும் எல்லையாக மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்தது;இன்றும்,ஆஸ்திரேலியாவின் மேற்கு வனப்பகுதியில் தமிழ்ப்பேசும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்காக நமது தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப் பட்டவர்கள்!!!)

மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை மற்றும் போதுமான மல்லிகை உதிரிப்பூக்கள், விபூதி, மாப்பொடி,பால்,பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் சுக்கிர பகவானுக்கு நாம் வாங்கி வந்த மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலையையும்,வெள்ளைப்பட்டுத் துண்டினையும் சார்த்த வேண்டும்.யாருக்கு சுக்கிர தோஷம் நீங்க வேண்டுமோ,அவர்கள் பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி, மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.இதன் மூலமாக சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் தீரும்.

சுக்கிரன் கன்னிராசியில் இருக்கப்பிறந்து,சுக்கிர திசை நடப்பில் இருப்பவர்களும்,சுக்கிர திசை இனிமேல் வர இருப்பவர்களும் இதே வழிபாட்டுமுறையை ஆறு பவுர்ணமி நாட்களுக்கு பின்பற்றிட சுக்கிரனது நீசத்தன்மை முழுமையாக நீங்கிவிடும்.

ஓம்சிவசிவஓம்

Wednesday, June 26, 2013

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள் - பூசம் - ஸ்ரீ வாஞ்சியம்

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்களில் இன்று பூச நட்சத்திரத்திற்குரிய "ஸ்ரீ வாஞ்சியம்" ஸ்தலத்தைப் பற்றி பார்ப்போம்.

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.

இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர்
இறைவி-மங்கள நாயகி
தீர்த்தம்-குப்த கங்கை

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple

Sri Vanjiyam Temple


புனித நீராடல்:

திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள். காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

முதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.

சிறப்பம்சம்:

திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர்,  காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது. சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.

உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது  இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய  தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.

இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன்,  எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர்,  வசிஷ்டர்,  வால்மீகி ஆகியோர்.

பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது  திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம். இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.

இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.

பொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு  எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.

இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.

ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.

திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.

இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.

இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.

ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.

கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறுவர். சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி   இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.

ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்.

தொலைபேசி எண்கள் : +91-4366 291 305, 94424 03926, 93606 02973

Thursday, June 20, 2013

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

Gayatri Mantra
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.

சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்


ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

நன்றி : தினமலர் 

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...